» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நீதிமன்ற உத்தரவு எதிரொலி: பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் அடக்கம்
சனி 16, டிசம்பர் 2023 4:08:38 PM (IST)
நாகர்கோவில் அருகே நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பிள்ளைதோப்பு பகுதியில் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய ஆலயம் நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில் மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் படி மத சம்பிரதாயப்படி கோவில் கல்லறையில் அடக்க உத்தரவு பிறப்பித்ததையடுத்து. சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ரேவிதா என்ற பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு இன்று கோவில் கல்லறை தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.