» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாலையில் எலக்ட்ரிக் பைக் தீபிடித்ததால் பரபரப்பு!
வெள்ளி 15, டிசம்பர் 2023 8:20:43 AM (IST)
வல்லநாடு அருகே சாலையில் நின்று கொண்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீபிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம் அருகில் நேற்று மின்சார இருசக்கர வாகனம் எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். தீயில் எரிந்த மின்சார இருசக்கர வாகனத்தின் உரிமையாளா் மற்றும் அதனை ஓட்டி வந்தது யாா் என்று போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.