» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கவுன்சிலர் வீட்டில் புகுந்த 7அடி நீள பாம்பு: குமரி அருகே பரபரப்பு
வியாழன் 14, டிசம்பர் 2023 8:03:10 PM (IST)
குமரி அருகே கவுன்சிலர் வீட்டிற்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் அன்வர் சதாத். குளச்சல் நகராட்சி கவுன்சிலரான இவரது வீட்டில் இன்று 7 அடி நீள சாரை பாம்பு நுழைந்தது. இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறி ஓட்டம்பிடித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மார்பிள் கற்களுக்கு இடையே பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். வீட்டிற்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.