» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது: விஜய்வசந்த் எம்.பி

புதன் 13, டிசம்பர் 2023 8:23:27 PM (IST)

பாராளுமன்றத்தில் நுழைந்து விஷமிகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என  விஜய்வசந்த் எம்.பி., தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "பாராளுமன்றத்திற்குள் விஷமிகள் புகுந்து இன்று நடத்திய தாக்குதல் இந்திய ஜனநாயகம் மீதான தாக்குதல். பாராளுமன்ற கூட்ட தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நடந்த இந்த செயல் பாதுகாப்பு மீதான சந்தேகத்தை எழுப்புகிறது. மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கூடும் இடத்தில் பாதுகாப்பு பலவீனமாக இருப்பது அதிர்ச்சி மற்றும் பல கேள்விகளை எழுப்புகிறது. 

குறிப்பாக இன்றைய  தினம் பாராளுமன்றத்தில் 2001ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நாள். அதை கருத்தில் கொண்டு பாதுகாப்பை அரசு பலப்படுத்தியிருக்க வேண்டும். அரசின் உளவுத் துறையின் பெரிய மெத்தனத்தையே இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.  குறிப்பாக தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியில் விஷமிகள் தாக்குதல் நடத்தியிருப்பது கவலை அளிக்கிறது. 

பாதுகாப்பில் நடந்த இந்த பெரிய வீழ்ச்சி குறித்து விசாரிக்க ஒரு குழுவை அரசு அமைக்க வேண்டும். இந்தத் சம்பவம் மீது தீவிர விசாரணை நடத்தி இதற்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க அரசை கேட்டு கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

KK PEOPLESDec 14, 2023 - 01:47:01 PM | Posted IP 172.7*****

இவர் மக்களுக்காக / தொகுதிக்காக பாராளுமன்றத்தில் பேசியதே இல்லை, இதை மட்டும் பேசுகிறார்......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory