» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சமூக வலைதளத்தில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டவர் கைது!

வியாழன் 7, டிசம்பர் 2023 8:22:45 PM (IST)

சமூக வலைதளத்தில் ஆபாச வீடியோக்களை பதிவிட்ட வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 

திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் விஜய் (26). இவர் இணைய மற்றும் சமூக வலைதள குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து வந்தார். 

கடந்த 4-ந் தேதி சமூக வலைதளமான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமை பார்த்து கொண்டு இருந்தபோது, இன்பாஸ் டிராக் என்ற பெயரிலான ஐ.டி.யை பயன்படுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த இன்பநிதி (வயது 30) என்பவர் சமூக வலைதளங்களில் ஆபாசத்தை தூண்டும் வகையில் மோனோ ஆக்டிங் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. மேலும் அவர், முதலிரவு பற்றிய வீடியோக்களையும், கணவன்-மனைவி உறவுமுறை பற்றி ஆபாசமாகவும் பதிவிட்டுள்ளார். இவரின் வீடியோக்களை பார்க்கும்போது, அனைத்தும் அருவெறுக்க தக்க வகையில் இருந்தது.

இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளிடம் பாலுணர்வை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக போலீஸ்காரர் விஜய் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்பநிதியை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவருக்கு இன்ஸ்டாகிராமில் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களும், யூடியூபில் ஒரு லட்சத்து 93 ஆயிரம் சந்தாதாரர்களும் (சப்ஸ்கிரைபர்ஸ்) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory