» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு சிறப்பு முகாம்: ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு!

சனி 2, டிசம்பர் 2023 3:41:36 PM (IST)



முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு சிறப்பு முகாமினை குமரி மாவட்ட  ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட தம்பத்துக்கோணம் அரசுநடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கட்டணமில்லா சேவையினை ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தினை கடந்த 23.07.2009 அன்று துவங்கி வைத்தார்.
 
மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியவற்றினை 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்தும் ஆணையை பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் 10.01.2022 அன்று துவக்கி வைத்தார்கள். 

இத்திட்டத்தின் படி காப்பீட்டுத் திட்ட பயனாளி குடும்பத்திற்கு ஓராண்டிற்கு ரூ.5 இலட்சம் வரை அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி சிகிச்சை பெறலாம்.
அதனடிப்படையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் நூறு சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகிறது. 

இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட தம்பத்துக்கோணம் அரசு நடுநிலைப்பள்ளியிலும், தோவாளை வட்டத்திற்குட்பட்ட மாதவாலயம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கல்குளம் வட்டத்திற்குட்பட்ட திருவிதாங்கோடு திருவாய் மெடி சென்டரிலும், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட விளவங்கோடு மலையடி அரசு தொடக்கப்பள்ளியிலும் இன்று நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் முகாம்களில் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 32 விண்ணப்பங்களும், தோவாளை வட்டத்தில் 36 விண்ணப்பங்களும், கல்குளம் வட்டத்தில் 15 விண்ணப்பங்களும், விளவங்கோடு வட்டத்தில் 35 விண்ணப்பங்கள் என இதுவரை மொத்தம் 108 விண்ணப்பங்கள் இணையவழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு சேர்க்கை முகாமில் இது வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தில் பதிவு செய்யாத பயனாளிகள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் வந்து பதிவு செய்து கொண்டு பயனடையலாம். இந்த முகாமில் பதிவு செய்ய தவறியவர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பதிவு மையத்திற்கு வந்து பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், தெரிவித்தார்கள்.

ஆய்வில் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் அ.பிரகாலதன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சு.மீனாட்சி, மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory