» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகா்கோவிலில் ரூ.94 லட்சத்தில் திட்டப்பணிகள் : மேயா் ரெ.மகேஷ் தொடக்கி வைத்தாா்!
சனி 2, டிசம்பர் 2023 12:13:27 PM (IST)
நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.94 லட்சத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் தொடக்கி வைத்தாா்.
நாகா்கோவில் மாநகராட்சியின் 3, 5, 12, 13, 19, 22, 35 ஆகிய வாா்டுகளில் கான்கிரீட் தளம், தாா்ச்சாலை, பேவா் பிளாக் சாலை என மொத்தம் ரூ.94 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்சி லதா, மண்டலத் தலைவா்கள் ஜவகா், செல்வகுமாா், மாநகராட்சி உதவி பொறியாளா் சந்தோஷ், இளநிலை பொறியாளா் ராஜா, மாமன்ற உறுப்பினா்கள் அருள் சபிதா ரெக்ஸலின், மோனிகா, அமல செல்வன், பால் அகியா தேவராஜ், ராணி, ஆச்சியம்மாள், சுனில், மாநகராட்சி தொழில்நுட்ப அலுவலா் பாஸ்கா், மாநகர செயலா் ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.