» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஊதா விளக்குகளால் அலங்கரிப்பு: ஆட்சியர் ஆய்வு
சனி 2, டிசம்பர் 2023 10:01:25 AM (IST)
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் ஒளியூட்டப்பட்ட மின்விளக்கு காட்சியினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்குள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் தொடர்பான விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் ஊதா நிறத்தில் ஒளியூட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட மின்விளக்கினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மாற்றுத் திறனாளிகள் தினத்தினை மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் தொடர்பான விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடங்களிலும் ஊதா நிறத்தில் ஒளியூட்டப்பட்ட மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் டிச.3ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் ஊதா நிறத்தில் ஒளியூட்டப்பட்ட மின்விளக்கு காட்சிப்படுத்தபட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டார்கள்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உள்ளார்கள்.