» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மீனாட்சிபுரத்தில் புதிய மின்பாதை அமைக்கும் பணி: மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்!
புதன் 29, நவம்பர் 2023 3:51:58 PM (IST)
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் புதிய மின்பாதை அமைக்கும் பணியினை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி வடிவீஸ்வரம் மின்சார வாரிய அலுவத்தில் மின்சார வாரியம் மூலம் மீனாட்சிபுரம் புதிய மின்பாதை அமைக்கும் பணியினை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், கிழக்கு மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன், மற்றும் மின்வாரிய அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.