» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கார் நின்ற இடத்தை விட்டு அவசர கதியில் சாலை அமைப்பு : நாகர்கோவிலில் பரபரப்பு!

சனி 16, செப்டம்பர் 2023 10:17:38 AM (IST)



நாகர்கோவிலில் கார் நின்ற இடத்தை விட்டு அவசர கதியில் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டதால் ஏராளமான சாலைகள் படுமோசமாக காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து தற்போது சாலைகள் சீரமைப்பிற்காக நிதி ஒதுக்கப்பட்டு தெருவாரியாக சாலை பணி நடந்து வருகிறது. அந்த வகையில் வடிவீஸ்வரம் நடராஜபுரம் ஆசாரிமார் தெற்கு தெருவில் நேற்று இரவு சாலை போடும் பணி மும்முரமாக நடந்தது.

அப்போது ஒரு திருமண மண்டபம் முன்பு சாலையில் கார் நின்றது. அந்த கார் யாருடையது என்று தெரியவில்லை. வெகுநேரமாக அதே இடத்தில் நின்றதால், சாலை பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அவசர கதியில் கார் நின்ற இடத்தை விட்டு விட்டு மற்ற இடங்களில் ஜல்லியை நிரப்பி சாலை போட்டனர்.

இதனை கவனித்த பொதுமக்கள் இது என்னய்யா, நடுவுல கொஞ்சம் சாலையை காணோம் என்று ஆதங்கத்தை தெரிவித்தனர். அதற்கு காரை தள்ள முடியாததால் மற்ற இடங்களில் சாலை போடுகிறோம் என சாலை அமைத்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள் சிலர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு கிண்டலாக மீம்ஸ் செய்து பரப்பினர். இந்த வீடியோ வைரலானதால் நாகர்கோவிலில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory