» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரிவினைவாதிகளின் குற்றச்செயல்களுக்கு இடம் இல்லை: இந்தியாவிடம் நியூசிலாந்து பிரதமர் உறுதி!

செவ்வாய் 7, ஜூலை 2026 12:26:02 PM (IST)

PModiNewzEaland.jpg

நியூசிலாந்தில் காலிஸ்தான் கோரும் பிரிவினைவாதிகளின் இந்தியாவுக்கு எதிரான குற்றச் செயல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அளித்த பேட்டியில், நியூசிலாந்து நாடு பேச்சு சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் மதிக்கிறது என்றாலும், அதன் பெயரால் நிகழ்த்தப்படும் எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது வன்முறையும் நாட்டின் சட்டத்தின்கீழ் மிகக் கடுமையாகக் கையாளப்படும் என்று எச்சரித்துள்ளார். காலிஸ்தான் விவகாரம் இந்தியாவில் பெரிய துயரத்தையும், பெரும் இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தாங்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் பேசிய பிரதமர், நாங்கள் ஜனநாயக நாடாக இருந்து கருத்துச் சுதந்திரத்தை வழங்கினாலும், மக்கள் எங்கள் நாட்டு விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவுகளில் எந்தவொரு தடையையும் ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு வன்முறைச் செயல்களும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றார். நியூசிலாந்து போலீசார் இந்தப் பிரிவினைவாதப் பிரச்னைகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருந்து, அவற்றைச் சிறப்பாகக் கையாண்டு வருவதாகவும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அந்தப் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory