» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் துணை பிரதமர் விருப்பம்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:43:51 PM (IST)

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. பிரச்னைகள் முடிவிலாமல் நீண்டுகொண்டே இருக்கும்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அந்நாட்டு துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிச்சை எடுக்காது. இருப்பினும், இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளிலும் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஜம்மு - காஷ்மீர் பிரச்னை உள்பட அனைத்து பிரச்னைகளிலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.
இந்தியாவுடனான மோதலில், வான் மற்றும் நிலத்திலும் பாகிஸ்தான் தங்கள் வலிமையை நிரூபித்தது. மேலும், தங்கள் மீதான எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் முழுமையான பதிலளிக்கப்படும் என்று எச்சரித்தது. கடல்வழியாகக்கூட இந்தியாவுக்கு முழு பலத்துடன் பதிலடி பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி: நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய ஸோரான் மம்தானி!
புதன் 5, நவம்பர் 2025 12:43:54 PM (IST)

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)


.gif)