» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் : 33 பேர் மாயம்!!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:39:09 PM (IST)

சீனாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளனர்.
சீனாவின் கான்சு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக யொக்சங், லங்ஹொ நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளனர்.
மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, கனமழை, வெள்ளப்பெருக்கால் மின்சாரம், தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கினார்கள்: ஒபாமா மீது டிரம்ப் விமர்சனம்!!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:52:07 AM (IST)

ஹங்கேரி எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:50:42 PM (IST)

ஆப்கானிஸ்தான் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்ற முயற்சி: இந்தியா எதிர்ப்பு!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:29:54 PM (IST)

தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்த கலிபோர்னியா மாகாணம்!
புதன் 8, அக்டோபர் 2025 11:52:34 AM (IST)

அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல்!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 3:59:46 PM (IST)

மருத்துவத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்கர்கள் இருவர் உட்பட மூவருக்கு பகிர்ந்தளிப்பு!
திங்கள் 6, அக்டோபர் 2025 5:34:08 PM (IST)
