» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் : 33 பேர் மாயம்!!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:39:09 PM (IST)

சீனாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளனர்.
சீனாவின் கான்சு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக யொக்சங், லங்ஹொ நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளனர்.
மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, கனமழை, வெள்ளப்பெருக்கால் மின்சாரம், தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்: சீனா உறுதி
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 10:11:36 AM (IST)

இந்தியாவுடனான வர்த்தக மோதல் பாதிப்பை ஏற்படுத்தும் : டிரம்ப்புக்கு நிக்கி ஹாலே எச்சரிக்கை
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:42:38 PM (IST)

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்: ரஷ்யா அறிவிப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:15:30 AM (IST)

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : அமெரிக்கா விளக்கம்
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:12:27 AM (IST)

குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்: புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:35:27 AM (IST)

போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
சனி 16, ஆகஸ்ட் 2025 12:14:42 PM (IST)
