» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிறைபிடிக்கப்பட்ட கப்பல்: 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் முடிவு
சனி 27, ஏப்ரல் 2024 4:01:12 PM (IST)
ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள மாலுமிகளை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ள சூழலில் இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரானின் கடற்படையான இஸ்லாமிய புரட்சிக் காவல் படை கடந்த 13-ந் தேதி சிறைபிடித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு அக்கப்பல் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலில் 25 மாலுமிகள் இருந்ததாகவும், அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியானது.
இதனிடையே ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் ஒருவரான பெண் பணியாளர் ஆன் தேஸ்ஸா ஜோசப் கடந்த 18-ந்தேதி பாதுகாப்பாக கொச்சி திரும்பினார். மேலும் கப்பலில் சிக்கியுள்ள 16 இந்தியர்களுடன் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
மக்கள் கருத்து
இந்தியன்Apr 27, 2024 - 09:22:52 PM | Posted IP 172.7*****
மத்திய அரசுக்கும், மோடிக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்.
சந்திரன்Apr 28, 2024 - 12:00:48 PM | Posted IP 172.7*****