» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பதவி விலக மறுத்த மமதா: சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
வியாழன் 7, மே 2026 9:00:04 PM (IST)

மேற்கு வங்கத்தில் முதல்வர் பதவியிலிருந்து விலக மமதா பானர்ஜி மறுப்பு தெரிவித்த நிலையில் அம்மாநில சட்டப்பேரவையைக் கலைப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில், பாஜக தலைமையிலான கூட்டணி 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதன் மூலம் திரிணமூல் காங்கிரஸின் நீண்டகால ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய மமதா பானர்ஜி, முதல்வர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என அதிரடியாக அறிவித்தார்.
பாஜக தலைமையிலான புதிய அரசு நாளை மறுநாள் (மே 9) பதவியேற்கத் திட்டமிட்டிருந்த சூழலில், மமதாவின் பிடிவாதம் அரசியல் சாசன நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 174 (2)(பி)-ன் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார்.
நிபுணர்களின் கருத்து: மேற்கு வங்க அரசின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்தச் சூழல் குறித்து மத்திய அரசின் முன்னாள் செயலர் ஜவஹர் சிர்கார் கூறுகையில், "புதிய முதல்வர் முறைப்படி பதவியேற்கும் வரை, அம்மாநிலத்தில் நிலவும் இடைக்கால அரசுக்கான தலைமையை ஆளுநரே ஏற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மமதா பானர்ஜியின் எதிர்ப்பு மற்றும் ஆளுநரின் இந்தத் தீர்க்கமான முடிவால் மேற்கு வங்க அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)


