» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)
நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றவும், தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக ஆக்கவும் பாஜக முயற்சிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து ராகுல் காந்தி பேசியதாவது: தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மசோதா உண்மையான மகளிர் இடஒதுக்கீடு மசோதா கிடையாது. இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்காது; மாறாக, இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் முயற்சியாகும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தவிர்க்கவும், ஓபிசி (OBC) பிரிவினருக்கான பிரதிநிதித்துவத்தைப் பறிக்கவும் இந்த மசோதா பயன்படுத்தப்படுகிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்குச் சாதிவாரி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.
பாஜக ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகத் தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பங்களிப்பைப் பறிக்க முயல்கிறது. மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறையைக் கொண்டு வருவது தேச விரோத செயல். தென் மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை யாராலும் தொட முடியாது என்பதை உறுதி அளிக்கிறேன். பாஜகவின் இந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது.
"நாட்டில் நிலவும் அரசியல் சூழலைக் கண்டும், தங்கள் பலம் குறைந்து வருவதைக் கண்டும் அஞ்சி பாஜக இத்தகைய முயற்சிகளில் இறங்கியுள்ளது. அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் செய்ததைப் போல தேசிய அளவிலும் செய்துவிடலாம் என அவர்கள் கற்பனை செய்கிறார்கள். அரசமைப்பை விட மனுஸ்மிருதியே பாஜகவுக்கு முக்கியமாக உள்ளது," என ராகுல் சாடினார்.
மசோதா நிறைவேறாது என்பது தெரிந்தும், பிரதமர் மோடி இரண்டு செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல முயல்கிறார். ஒன்று, அரசியல் வரைபடத்தை மாற்றுவது; மற்றொன்று, தான் பெண்களுக்கு ஆதரவானவர் எனக் காட்டுவது. பணமதிப்பிழப்பு உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்த 'வித்தைக்காரர்' இப்போது பிடிபட்டுவிட்டார் எனப் பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்தார்.
பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் கோஷங்களை எழுப்பிய அவர்கள், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மக்கள் கருத்து
நாட்டை நாசமாக்கும் நாய்கள்Apr 18, 2026 - 11:53:38 AM | Posted IP 172.7*****
பாலியல் ஜல்சா கட்சியின் சங்கி கூட்டம் நாட்டை நாசமாக்க துடிக்கிறது
டேய் பப்புApr 18, 2026 - 08:08:36 AM | Posted IP 172.7*****
இத்தாலிக்கு போயா இங்கு ஒனக்கு என்ன வேலை ?
peopleApr 17, 2026 - 09:52:58 PM | Posted IP 172.7*****
please, no constituency delimitation in tamilnadu.
peopleApr 17, 2026 - 09:31:47 PM | Posted IP 162.1*****
this amendment act, does not match in tamilnadu state - ok
மேலும் தொடரும் செய்திகள்

புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தலையீடு : மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:50:06 PM (IST)

ஆட்டோ டெபிட் வரம்பு ரூ.15 ஆயிரமாக உயர்வு : இனி ஓடிபி தேவையில்லை - ஆர்பிஐ அறிவிப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 5:51:36 PM (IST)

திருச்சூர் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு : விசாரணை ஆணையம் அமைத்தது கேரள அரசு!
புதன் 22, ஏப்ரல் 2026 5:25:16 PM (IST)

பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது: பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் பிரதமர் அஞ்சலி
புதன் 22, ஏப்ரல் 2026 12:50:25 PM (IST)

டெல்லியில் போலி ஈனோ, நெஸ்கஃபே தயாரித்த கும்பல் கைது: 1.5 லட்சம் பாக்கெட்டுகள் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:15:54 PM (IST)

தேங்கி நிற்கும் பயங்கரவாத வழக்குகள்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் நடவடிக்கை
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:33:31 PM (IST)


srinivasanApr 21, 2026 - 04:25:18 PM | Posted IP 172.7*****