» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தேசிய மாநாடு : தேசிய செயலாளராக டி.எஸ்.ஆர். சுபாஷ் தேர்வு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:43:23 PM (IST)

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளராக டி.எஸ்.ஆர். சுபாஷ் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் 11-வது தேசிய மாநாட்டில், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த மாநாட்டில் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளராகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து, தேசிய செயற்குழு உறுப்பினர்களாக எம்.பி. மதிமகாராஜா (தலைவர், புதுச்சேரி பத்திரிகையாளர்கள் யூனியன்). எஸ். மோகன்ராஜ் (கோவை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நிர்வாகிகளுக்கு, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் வருகையைப் பாராட்டி, தேசியச் செயலாளர் டி.எஸ்.ஆர். சுபாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்துச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இம்மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர் சங்கப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கி மாறும் வசதி : ரிசர்வ் வங்கி பரிசீலனை!
புதன் 1, ஏப்ரல் 2026 12:53:12 PM (IST)

சர்வதேசப் போர் பதற்றம்: பிரீமியம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
புதன் 1, ஏப்ரல் 2026 12:23:41 PM (IST)

பீகார் கோவில் திருவிழாவில் பெரும் சோகம்: கூட்ட நெரிசலில் 8 பெண்கள் உயிரிழப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:24:20 PM (IST)

ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலியைக் கொன்று பிரிட்ஜில் வைத்த கடற்படை ஊழியர்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:25:07 PM (IST)

கேரளாவில் பா.ஜனதா ஆட்சியின் நுழைவுவாயில் பாலக்காடு - பிரதமர் மோடி பிரசாரம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:34:25 AM (IST)

மில்க்ஷேக்கில் விஷம் கலந்து தந்தையை கொன்ற பெண் காவலர்: 3 ஆண்டுகளுக்குப் பின் அம்பலம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:41:26 AM (IST)

