» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா எண்ணெய் வாங்க அனுமதிக்க அமெரிக்கா யார்? - மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்குதல்!
வெள்ளி 6, மார்ச் 2026 12:42:42 PM (IST)
இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு; நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அமெரிக்கா யார்?" என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாட்கள் 'அனுமதி' வழங்கியுள்ள விவகாரம், இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. "இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு; நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அமெரிக்கா யார்?" என காங்கிரஸ் கட்சி மத்திய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க, ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கிக்கொள்ள 30 நாட்களுக்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட் இது குறித்துக் கூறுகையில்: "உலகச் சந்தையில் எண்ணெய் விநியோகம் தடையின்றித் தொடர, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய எண்ணெயை வாங்க நிதியமைச்சகம் 30 நாட்கள் அனுமதி அளிக்கிறது. இது கடலில் தேங்கியுள்ள எண்ணெய்க்கான ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே. இந்தியா எங்களின் முக்கியப் பங்காளியாகும்; வரும் காலங்களில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்."
"நாட்டை அடமானம் வைத்துவிட்டார் மோடி
அமெரிக்காவின் இந்த 'அனுமதி' அறிவிப்பை முன்வைத்து, காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கியக் குற்றச்சாட்டுகள்: இந்தியா யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்கும் நிலைக்கு நரேந்திர மோடி அரசு நாட்டைத் தள்ளிவிட்டது. இந்தியா எந்த நாட்டிற்கும் அடிமையல்ல; நாம் ஒரு சுதந்திரமான நாடு. அப்படி இருக்கும்போது, இந்தியாவுக்கு அனுமதி வழங்க அமெரிக்கா யார்?" என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் மோடி அமெரிக்க நலன்களுக்காக நாட்டை அடமானம் வைத்துவிட்டார் என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவிடம் கேள்வி கேட்க அவர் தயங்குவது வெட்கக்கேடானது என்றும் அக்கட்சி சாடியுள்ளது.
ஏற்கனவே உக்ரைன் - ரஷியப் போர் காரணமாக ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்தித் தேவைகளுக்காக மேற்கொள்ளப்படும் இந்த நகர்வுகள் சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. தற்போது எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதனை ஒரு நாட்டின் இறையாண்மைப் பிரச்சினையாகக் கையில் எடுத்துள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டோ டெபிட் வரம்பு ரூ.15 ஆயிரமாக உயர்வு : இனி ஓடிபி தேவையில்லை - ஆர்பிஐ அறிவிப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 5:51:36 PM (IST)

திருச்சூர் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு : விசாரணை ஆணையம் அமைத்தது கேரள அரசு!
புதன் 22, ஏப்ரல் 2026 5:25:16 PM (IST)

பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது: பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் பிரதமர் அஞ்சலி
புதன் 22, ஏப்ரல் 2026 12:50:25 PM (IST)

டெல்லியில் போலி ஈனோ, நெஸ்கஃபே தயாரித்த கும்பல் கைது: 1.5 லட்சம் பாக்கெட்டுகள் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:15:54 PM (IST)

தேங்கி நிற்கும் பயங்கரவாத வழக்குகள்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் நடவடிக்கை
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:33:31 PM (IST)

ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து : பிரதமரின் திறப்பு விழா ஒத்தி வைப்பு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:27:48 AM (IST)


முட்டாள்Mar 7, 2026 - 11:16:58 AM | Posted IP 172.7*****