» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சித்தூர் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!
வியாழன் 5, மார்ச் 2026 8:36:13 AM (IST)
பெங்களூருவில் இருந்து திருப்பதிக்குச் சென்ற கார், சித்தூர் அருகே லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்தவர்கள் மோகன்தாஸ் (71), நாகராஜா ராவ் (61), குசுமா (61), ஜெயந்தி (59) மற்றும் பூஜா (33). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஐந்து பேரும் நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து திருப்பதிக்கு காரில் புறப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், பலமனேர் பகுதியில் உள்ள கங்காவரம் பைபாஸ் சாலையில் இன்று காலை 8 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், பெங்களூருவில் சிமெண்ட் பாரம் இறக்கிவிட்டு ஒரு லாரி நெல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் கார் பலமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுமையாக லாரியின் அடியில் சிக்கி உருக்குலைந்தது. காரில் இருந்த 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சத்தம் கேட்டு லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் வந்து பார்த்தபோது, விபத்தின் தீவிரம் தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த கங்காவரம் மற்றும் பலமனேர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் காரின் இடிபாடுகள் அகற்றப்பட்டு, பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக பலமனேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து கங்காவரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:02:22 PM (IST)

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:50:45 AM (IST)

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)


