» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும்: நெதன்யாகுவுடன் மோடி அவசர ஆலோசனை
திங்கள் 2, மார்ச் 2026 5:55:10 PM (IST)

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேசினேன். மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழல் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்தேன். வன்முறைகளைத் தவிர்த்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முதலிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். இந்தப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது."
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது, வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர், இந்த இக்கட்டான தருணத்தில் இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் துணையாக நிற்கும் என்று உறுதி அளித்தார்.
சனிக்கிழமை (பிப். 28) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், இஸ்ரேலின் பெய்ட் ஷெமேஷ் (Beit Shemesh) நகரில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காணாமல் போயுள்ளனர். போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் எதிர்கொண்ட மிகக் கொடிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்திற்கு வி. மோகனா உள்பட 5 புதிய நீதிபதிகள் நியமனம் - மத்திய அரசு உத்தரவு!
திங்கள் 1, ஜூன் 2026 12:44:55 PM (IST)

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - பலி 6 ஆக அதிகரிப்பு, மீட்புப் பணி தீவிரம்!
ஞாயிறு 31, மே 2026 8:45:18 PM (IST)

பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி திட்டம்: தயாரிப்பு செலவை குறைக்க அதிரடி நடவடிக்கை!
சனி 30, மே 2026 11:09:24 AM (IST)

மராட்டியத்தில் விஷச் சாராயம் குடித்த 14 பேர் பரிதாப பலி - 5 பேர் கவலைக்கிடம்: 8 பேர் கைது!
சனி 30, மே 2026 8:57:44 AM (IST)

கேரள சட்டப்பேரவையில் வந்தே மாதரம் பாடாததால் சர்ச்சை: ஆளுநர் அதிருப்தி!
வெள்ளி 29, மே 2026 3:46:47 PM (IST)

சவுதியில் மரண தண்டனையில் இருந்து மீண்ட அப்துல் ரஹீமுக்கு கேரள மக்கள் வரவேற்பு!
வெள்ளி 29, மே 2026 12:42:56 PM (IST)


