» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும்: நெதன்யாகுவுடன் மோடி அவசர ஆலோசனை
திங்கள் 2, மார்ச் 2026 5:55:10 PM (IST)

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேசினேன். மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழல் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்தேன். வன்முறைகளைத் தவிர்த்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முதலிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். இந்தப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது."
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது, வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர், இந்த இக்கட்டான தருணத்தில் இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் துணையாக நிற்கும் என்று உறுதி அளித்தார்.
சனிக்கிழமை (பிப். 28) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், இஸ்ரேலின் பெய்ட் ஷெமேஷ் (Beit Shemesh) நகரில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காணாமல் போயுள்ளனர். போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் எதிர்கொண்ட மிகக் கொடிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து மாநிலங்களிலும் 50% தொகுதிகள் உயர்வு: மக்களவையில் மத்திய அமைச்சர் உறுதி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:12:22 PM (IST)

பெண்கள் இட ஒதுக்கீட்டைச் சீர்குலைக்க திமுக முயற்சி - தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:12:41 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்தில் 8 பக்தர்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல் - நிதியுதவி அறிவிப்பு
வியாழன் 16, ஏப்ரல் 2026 10:21:14 AM (IST)

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் 93.7% பேர் தேர்ச்சி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:37:11 AM (IST)

வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:12:11 PM (IST)

குடியரசுத் துணைத் தலைவர் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 12:08:02 PM (IST)

