» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொன்ற நர்ஸ் கைது!
வியாழன் 29, ஜனவரி 2026 8:24:37 AM (IST)
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொன்ற நர்சை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் வியாசாரம் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி தசரத் - லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், சுரேகா உள்பட 3 மகள்களும் உள்ளனர். சுரேகா அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
அதே மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு சுரேகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு மற்றொரு வாலிபருடன் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் சுரேகா தனது காதலில் உறுதியாக இருந்தார்.
தசரத்தும், அவரது மனைவி லட்சுமியும் கால்வலியால் சிரமப்பட்டு வந்தனர். நர்சான தனது மகள் சுரேகாவிடம் கால் வலி அதிகமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுரேகா, கால்வலியை தீர்ப்பதற்கான மருந்து என்று கூறி நைசாக 2 பேருக்கும் விஷ ஊசி செலுத்தினார்.
இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். கொலையை மறைக்க நினைத்த சுரேகா, இருவரையும் வீட்டில் படுக்க வைத்தார். பின்னர் தனது சகோதரருக்கு போன் செய்து, தந்தையும், தாயும் சுயநினைவின்றி கிடப்பதாக கூறியுள்ளார். உடனே அவர் பதற்றத்துடன் வந்து பார்த்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடன் தொல்லை காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையே சுரேகாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை பிடித்து தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போதுதான் பெற்றோர் என்றும் பாராமல் அவர்களை விஷ ஊசி செலுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மற்றவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய நர்சே 2 பேரின் உயிரை அதுவும் தன்னை பெற்ற பெற்றோரையே கொன்ற கொடூரம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அலுமினிய பாத்திரங்களுக்கு ஐ.எஸ்.ஐ. தரச்சான்று கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு
செவ்வாய் 17, மார்ச் 2026 11:46:00 AM (IST)

குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்பு: தந்தைக்குத் கல்லீரலைத் தானமாக வழங்கி உயிர் கொடுத்த மகள்!
செவ்வாய் 17, மார்ச் 2026 11:34:53 AM (IST)

கல்வி உதவித்தொகையில் ரூ.11 கோடி மோசடி: அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
செவ்வாய் 17, மார்ச் 2026 8:44:19 AM (IST)

மக்களவை மாண்பைக் காப்பதில் ஓம் பிர்லா உறுதி: சபாநாயகருக்குப் பிரதமர் மோடி பாராட்டு!
திங்கள் 16, மார்ச் 2026 5:43:33 PM (IST)

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு - ரூ.25 லட்சம் நிவாரண நிதி!
திங்கள் 16, மார்ச் 2026 5:38:50 PM (IST)

ஈரானுடனான நட்புறவால் இந்தியக் கப்பல்களுக்குப் அனுமதி - ஜெய்சங்கர் விளக்கம்!
திங்கள் 16, மார்ச் 2026 5:11:19 PM (IST)

