» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முதல்வர் ஸ்டாலின் எப்போது ஐயப்ப பக்தராக மாறினார்? - கேரள பாஜக தலைவர் கேள்வி
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 10:49:17 AM (IST)
ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  
 திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அடுத்த மாதம் 20-ந் தேதி பம்பையில் ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் வெளிநாடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பிரதிநிதிகளாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 இந்த சங்கமத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை கேரள தேவஸ்தானத் துறை அமைச்சர வாசவன் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
 இந்நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பம்பையில் நடத்தப்படும் ஐயப்ப பக்தர்கள் சங்கமம் அரசியல் நாடகம். இதனை அரசியலாக்க வேண்டாம் என பினராயி விஜயன் கூறி இருக்கிறார். இதன் மூலம் அவர் யாரை ஏமாற்ற பார்க்கிறார். ஐயப்ப பக்தர்கள் சங்கமம், அரசியல் இல்லையென்றால் தேவஸ்தான தலைவர் தான் சென்னைக்கு சென்று இருக்க வேண்டும்.
 அங்கு மந்திரிக்கு என்ன வேலை. எதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஐயப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தீர்கள். அவர் எப்போது ஐயப்ப பக்தரானார். இது அரசியல் நாடகம். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், ஐயப்ப பக்தர்கள் சங்கமம் அரசியல் நாடகம் அல்லாமல் வேறென்ன?
 ஐயப்ப பக்தர்கள் சங்கமம் அரசு நிகழ்ச்சியல்ல, தேவஸ்தானம் நடத்தும் நிகழ்வு என பினராயி விஜயன் கூறுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யாத, தேவஸ்தானத்திற்கு இது தேவை தானா? என கேள்வி எழுகிறது. ஐயப்ப பக்தர்களை வேட்டையாடிய பினராயி விஜயன், ஐயப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கேற்க தகுதி இல்லாதவர். இவ்வாறு அவர் கூறினார்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெரு நாய்கள் வழக்கில் நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 12:48:51 PM (IST)

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)

ஆந்திராவில் கோவில் ஏகாதசி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்
சனி 1, நவம்பர் 2025 3:24:37 PM (IST)

வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு : வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சனி 1, நவம்பர் 2025 11:09:11 AM (IST)

உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ் : தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் பேச்சு!
சனி 1, நவம்பர் 2025 8:43:01 AM (IST)

சித்தூர் மேயர், கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:15:32 PM (IST)


.gif)