» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போதைப்பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது

சனி 19, ஏப்ரல் 2025 5:36:38 PM (IST)



போதைப் பொருள் வழக்கில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கேரள போலீசார் கைது செய்தனர். 

கொச்சியில் உள்ள ஹோட்டலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையின்போது சாக்கோ அங்கிருந்து தப்பியோடும் சிசிடிவி காட்சி பரவியதை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று ஆஜரான அவரிடம் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய பின் போலீசார் கைது செய்தனர்

முன்னதாக நோட்டீஸ் வழங்க நடிகரின் திருச்சூர் வீட்டுக்குப் போலீஸார் சென்ற போது, அவர் வீட்டில் இல்லாததால் அவரின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் சாக்கோ, எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹோட்டலில் நடந்த சோதனையின் போது, நடிகர் தப்பிச் சென்றது ஏன் என்பது குறித்து கேட்டறிவதே விசாரணையின் நோக்கம் என்று போலீஸார் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, மலையாள நடிகை வின்சி அலோஷியஸ், ஷைன் டாம் சாக்கோ மீது ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். அவர்கள் இருவரும் இணைந்து ‘சூத்ரவாக்யம்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அதன் படப்பிடிப்பில் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருட்களை உட்கொண்டு தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் நடிகை புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ‘அம்மா’ ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது. வின்சியின் புகார் குறித்து விளக்கம் அளிக்க ஷான் டைம் சாக்கோவுக்கு அந்த குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory