» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு !
திங்கள் 7, ஏப்ரல் 2025 5:08:42 PM (IST)
நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி அறிவித்துள்ளார்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இன்று வரை வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.803க்கு விற்பனையாகி வந்த நிலையில், அது இந்த விலை உயர்வு காரணமாக ரூ.853 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சாதாரண மானியம் பெறும் பயனாளிகளுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு உருளை பெறும் பயனாளிகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, எரிவாயு சிலிண்டர் விலை மாதத்துக்கு ஒரு முறை அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அண்மைக்காலமாக ஒவ்வொரு மாதமும் மாதத் தொடக்கத்தில் மாற்றியமைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எரிவாயு உருளை விலை மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயர்வது வழக்கம். மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றையும் கணக்கிட்டு எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப சமையல் எரிவாயு உருளையின் விலையை ஒவ்வொரு மாதமும் மாற்றி நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில்,
அந்த வகையில், ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலைகள் மாற்றியமைக்கப்பட்டன. அப்போது, உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.41 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
இதனால், சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,921.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அப்போது, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு வாரத்துக்குப் பின் தற்போது மீண்டும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை நகருக்கு நகரம் மாறுபடும் என்பதால், இந்த விலை உயர்வால், டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.853 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல சென்னையில் இதுவரை ரூ.818க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர் இனி ரூ.868க்கு விற்பனை செய்யப்படும். மும்பையில் இனி 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். கொல்கத்தாவில் அதிகபட்சமாக ரூ.879 ரூபாய்க்கு விற்பனையாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)
