» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இயற்கை பேரிடர் பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ரூ.522.34 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு
சனி 5, ஏப்ரல் 2025 5:13:53 PM (IST)
தமிழ்நாட்டில் 2024ல் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.522.34 கோடி பேரிடர் நிதியாக விடுவித்தது.
2024ம் ஆண்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், பிகார், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பேரிடர் நிவாரண நிதியாக ஆயிரத்து 280 கோடியே 35 லட்சம் ரூபாய் ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு கூடுதலாக 522 கோடியே 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு ரூ.37,000 கோடி கோரியிருந்த நிலையில் வெறும் ரூ.522 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 33 கோடியே 6 லட்சம் ரூபாய் ஒதுக்கி செய்யப்பட்டுள்ளது. பீகாருக்கு 588 கோடியே 73 லட்சம் ரூபாயும், இமாச்சல பிரதேசத்திற்கு 136 கோடியே 22 லட்சம் ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
2024-25 நிதியாண்டில் இதுவரை மாநில பேரிடர் நிவாரண நிதியாக 28 மாநிலங்களுக்கு மொத்தம் 20,264.40 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செங்கோட்டைக்கு உரிமை கோரி பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 6, மே 2025 10:57:43 AM (IST)

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)
