» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை: காங்கிரஸ்
புதன் 2, ஏப்ரல் 2025 12:09:49 PM (IST)
மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை. இது மிகத் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

1931 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பாக அதுகுறித்து கருத்து தெரிவித்த மகாத்மா காந்தி, ‘நாம் உடல்நலப் பரிசோதனையை அவ்வப்போது மேற்கொள்வது போன்று, தேசத்தின் நலனையும் பரிசோதிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு முக்கியமானது’ என்று குறிப்பிட்டாா்.
நாட்டின் மக்கள்தொகை பெருக்கத்தை மட்டுமின்றி, வேலைவாய்ப்பு, குடும்ப கட்டமைப்பு, சமூக-பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அறிந்துகொள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு முக்கியமானது.
ஆனால், துரதிருஷ்டவசமாக இதுவரை இல்லாத வகையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. இதனால், மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்கல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நாட்டில் எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினரின் கணக்கெடுப்பை அரசு ஏற்கெனவே சேகரித்துள்ள நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் பிற சமூகத்தினா் குறித்த ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவது சாத்தியமானதே. ஆனால், இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மத்திய அரசு மெளனமாக இருந்து வருகிறது. கரோனா பாதிப்புக்கு இடையே, உலகில் 81 சதவீத நாடுகள் மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளன.
ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 575 கோடியை மட்டும் ஒதுக்கியுள்ளது. இது, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்பதையே காட்டுகிறது. இதைத் தொடா்ந்து தாமதிப்பது மிகத் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். துல்லியமான புள்ளி விவரங்கள் இன்றி கொள்கைகளை அரசு வகுப்பது தன்னிச்சையானதாகவும் பயனற்ாகவும் அமையும். எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)
