» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பட்டாசு ஆலை தீவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு: குஜராத்தில் சோகம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:20:13 PM (IST)
குஜராத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா நகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்தின் எதிரொலியாக அருகிலிருந்த பட்டாசு கிடங்கும் இடிந்து விழுந்துள்ளது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த நிலையில், 200 மீட்டர் தொலைவுக்கு பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். மீட்கப்படுபவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதுவரை 13 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும், அப்பகுதியில் உள்ள வயல்களில் மனித உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தொழிற்சாலையின் துப்பாக்கிப் பவுடர் தயாரிக்கும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டு பரவியிருக்கக் கூடும் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)
