» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பட்டாசு ஆலை தீவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு: குஜராத்தில் சோகம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:20:13 PM (IST)
குஜராத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா நகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்தின் எதிரொலியாக அருகிலிருந்த பட்டாசு கிடங்கும் இடிந்து விழுந்துள்ளது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த நிலையில், 200 மீட்டர் தொலைவுக்கு பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். மீட்கப்படுபவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதுவரை 13 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும், அப்பகுதியில் உள்ள வயல்களில் மனித உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தொழிற்சாலையின் துப்பாக்கிப் பவுடர் தயாரிக்கும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டு பரவியிருக்கக் கூடும் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செங்கோட்டைக்கு உரிமை கோரி பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 6, மே 2025 10:57:43 AM (IST)

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)
