» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜார்கண்டில் சரக்கு ரயில்கள் மோதி விபத்து : ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் பலி!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:42:16 PM (IST)
ஜார்கண்டில் 2 சரக்கு ரயில்கள் மோதி மோதிய சிக்கியதில், ரயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா ரயில்வே லைனில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில், ரயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியானார்கள். ரயில்வே பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி வெளியான தகவலின்படி, நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலானது, பார்ஹத் எம்.டி. ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காலியான மற்றொரு சரக்கு ரயில் மீது அதிவேகத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியது. 2 ரயில்களுக்கு இடையேயான சிக்னல் தொடர்பு சரிவர பராமரிக்கப்படாததே விபத்திற்கான காரணம் என முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் கூறப்படுகிறது.
இதில் சரக்கு ரயில்களில் ஒன்றில் தீப்பிடித்து கொண்டது. இதனால் மீட்பு பணி அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது. விபத்தில், 5 ரயில்வே ஊழியர்கள் வரை காயமடைந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)
