» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திரப் பிரதேசம் முழுவதும் வெப்ப அலை வீசும் : பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:13:38 PM (IST)
ஆந்திரப் பிரதேசம் முழுவதும் இன்று வெப்ப அலை வீசும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான வெய்யில் கொளுத்திவரும் நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று 26 மண்டலங்களில் வெப்பம் கொளுத்தும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
26 மண்டலங்களில் விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவற்டடங்களில் தலா ஆறு மண்டலங்களும், அல்லூரி சீதாராமராஜுவில் 3 மண்டலங்களும், கிழக்கு கோதாவரியில் ஒன்று, பார்வதிபுரம் மன்யத்தில் 10 மண்டலங்கள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குநர் ஆர். கூர்மநாத் தெரிவித்தார்.
நந்தியாலா மாவட்டத்தில் கோஸ்பாடுகவில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதைத் தொடர்ந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள கம்மரசேடுவில் 40.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளன. அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நாகசமுத்திரத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)
