» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தி மூலம் பிற மொழிகளை நசுக்க நினைக்கவில்லை: ராஜ்நாத் சிங் பேச்சு!
ஞாயிறு 30, மார்ச் 2025 10:55:23 AM (IST)

இந்தி மூலம் பிற மொழிகளை நசுக்க நினைக்கவில்லை; இணைப்பை ஏற்படுத்த மத்திய அரசு விரும்புவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை வெளிக்கொணரும் முயற்சியை பா.ஜனதா மேற்கொண்டது. இதன் அடிப்படையில் பா.ஜனதா மகளிரணி, வீர மங்கை வேலு நாச்சியாரை கொண்டாடுகிறது. வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் வகையில் டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
டெல்லி முதல்-அமைச்சர் ரேகா குப்தா, ஒடிசா துணை முதல்-அமைச்சர் பிரவதி பரிதா, ராஜஸ்தான் துணை முதல்-அமைச்சர் திவ்யா குமாரி ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் பா.ஜனதா அமைப்பு செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசும்போது, "நாட்டில் ஜான்சி ராணியை அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே ஆங்கிலேயர்களை எதிர்த்த வீராங்கனை வேலு நாச்சியார் ஆவார். அதைப்போல அவரது படையில் இருந்த குயிலியையும் நான் நினைவுகூர்கிறேன்.
பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். மோடி பிரதமரான பிறகுதான் அது நடக்கிறது. நாங்கள் இந்தி மொழிக்கு மட்டும் அல்ல, அனைத்து மொழிகளுக்கும் மரியாதை தருகிறோம். பிற மொழிகளை நசுக்க நினைக்கவில்லை. இந்தி மூலம் இணைப்பையே ஏற்படுத்த விரும்புகிறோம்” என்றார். நிகழ்ச்சியில் வேலுநாச்சியாரைப் பற்றிய சித்திர புத்தகம் வெளியிடப்பட்டது. நாடகமும் நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செங்கோட்டைக்கு உரிமை கோரி பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 6, மே 2025 10:57:43 AM (IST)

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)
