» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது என்பதை வெளியிட முடியாது: அமித் ஷா
சனி 29, மார்ச் 2025 5:44:06 PM (IST)
வாக்குறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மோடி அரசாங்கத்தின் கீழ், ஜம்மு காஷ்மீரில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த இடத்திலும் மறு வாக்குப்பதிவு இல்லாத முதல் தேர்தல் நடந்துள்ளது. ஒரு கண்ணீர் புகை குண்டு வீச்சோ அல்லது ஒரு துப்பாக்கிச் சூடோ இல்லை. 60% மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர். இது ஒரு பெரிய மாற்றம்" என்று தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, "கடந்த 100 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்களைத் தயார்படுத்தி வருகிறது. பல பரிமாணங்களை ஒன்றிணைத்து, தேசபக்தியை மையமாக வைத்திருக்க முடியும் என்பதை ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்" என கூறினார்.
வக்பு சட்டத் திருத்தத்தின் முக்கியத்துவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, "சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத் இறந்த இடத்தை வக்பு தனது சொத்தாகக் கருதுகிறது. நாடாளுமன்றத்தையும், குடியரசுத் தலைவர் மாளிகையையும் வக்பு தனது சொத்தாகக் கருதுகிறது. மக்களை திருப்திப்படுத்தும் முயற்சியில், காங்கிரஸ் ஒரு வக்பு சட்டத்தை உருவாக்கியது. அதை நீதிமன்றத்தில் கூட சவால் செய்ய முடியாது. மோடி அரசு அதை அரசியலமைப்பின் வரம்பிற்குள் கொண்டு வருகிறது" என தெரிவித்தார்.
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கர்நாடக அரசின் முடிவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, "வாக்கு வங்கிக்காக, காங்கிரஸ் மதத்தின் அடிப்படையில் 'ஒப்பந்தங்களை' வழங்க விரும்புகிறது. மதத்தின் அடிப்படையில் அல்லாமல், தரம் மற்றும் விலையின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட வேண்டும்" என்றார்.
மேலும் அவர், "திமுக தனது ஊழலை மறைக்கவும், வரவிருக்கும் தேர்தலில் உடனடி தோல்வியை தடுக்கவும் மட்டுமே மொழி மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையை எழுப்புகிறது. தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்" என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செங்கோட்டைக்கு உரிமை கோரி பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 6, மே 2025 10:57:43 AM (IST)

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)
