» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புஷ்பா 2 சிறப்புக் காட்சிக்கு சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி!
வியாழன் 5, டிசம்பர் 2024 11:49:48 AM (IST)
ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படம் சிறப்புக் காட்சிக்கு சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் இன்று காலை வெளியாகியுள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்து, கன்னடம் என ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லாததால் புஷ்பா 2 படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் 2 சிறப்புக் காட்சி பார்ப்பதற்காக இன்று அதிகாலையிலேயே வந்த ரேவதி (39) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கிமயக்கமடைந்த அவரை காவலர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அவரது குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொலை: கொடூர தந்தை கைது!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:27:48 PM (IST)

வரும் கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயம்: சி.பி.எஸ்.இ. அதிரடி நடவடிக்கை!
சனி 4, ஏப்ரல் 2026 11:27:52 AM (IST)

மோடி அரசு அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பணிந்து போகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:45:56 PM (IST)

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு முருகன் படம் வழங்கி வாழ்த்து பெற்ற தமிழக ஐபிஎஸ் அதிகாரி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:19:20 PM (IST)

வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கி மாறும் வசதி : ரிசர்வ் வங்கி பரிசீலனை!
புதன் 1, ஏப்ரல் 2026 12:53:12 PM (IST)

சர்வதேசப் போர் பதற்றம்: பிரீமியம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
புதன் 1, ஏப்ரல் 2026 12:23:41 PM (IST)

