» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கணவரை கட்டிவைத்து சிகரெட்டால் சூடுவைத்து துன்புறுத்திய மனைவி கைது!

செவ்வாய் 7, மே 2024 3:49:25 PM (IST)



உ.பி.,யில் கணவரின் கை, கால்களை கட்டிவைத்து சிகரெட்டால் அந்தரங்க உறுப்புகளில் சூடுவைத்து துன்புறுத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியை சேர்ந்தவர் மனன் ஸைதி. இவர் மெஹர் ஜஹான் என்ற பெண்ணை திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். மெஹர் ஜஹான் அடிக்கடி தனது கணவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக மனன் போலீசில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனைவிக்கு தெரியாமல் வீட்டின் அறையில் கேமராவை பொருத்தினார். 

சம்பவத்தன்று, போதை கலந்த பாலை கணவருக்கு கொடுத்த மெஹர் ஜஹான், பின்னர் அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு சித்ரவதை செய்துள்ளார். கணவரின் மீது அமர்ந்து அவரது கழுத்தை நெரிக்கிறார்; சிகரெட் புகைத்தப்படி கத்தியால் அந்தரங்க உறுப்பை தாக்குகிறார். அதோடு சிகரெட்டாலும் சூடு வைக்கிறார். இதில் மனன் ஸைதி அலறுகிறார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீசிடம் ஒப்படைத்து மனன் புகார் அளித்தார். இதனையடுத்து கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் சித்ரவதை செய்தது உள்ளிட்ட குற்றத்திற்காக மெஹரை போலீசார் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory