» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெள்ள நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிட வேண்டும்: தமிழக அரசு மனு தாக்கல்!

புதன் 3, ஏப்ரல் 2024 11:52:05 AM (IST)

வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக்கேட்டு பார்த்தோம். தரவில்லை. நாளை (இன்று) காலை சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு போடப்போகிறோம்" என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் தற்போது மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே வெள்ள நிவாரணம் கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory