» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜார்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: சம்பாய் சோரன் அரசு வெற்றி!

திங்கள் 5, பிப்ரவரி 2024 5:36:53 PM (IST)

ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் சம்பாய் சோரன் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. 

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 31ம் தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. 

இதையடுத்து, ஜார்க்கண்ட் புதிய முதல்-அமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றார். சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டு இருந்தார். கவர்னரின் உத்தரவுப்படி, ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சம்பாய் சோரன் பெரும்பான்மையை காட்டினார். 

அதாவது ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக 47 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்தம் 81 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் ஆதரவு அவசியம் என்ற நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் சம்பாய் சோரன் அரசுக்கு கிடைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory