» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஹேமந்த் சோரன் கைது விவகாரத்தில் தலையிட முடியாது : உச்ச நீதிமன்றம்
வெள்ளி 2, பிப்ரவரி 2024 11:57:55 AM (IST)
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையினரால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறுமாறு, ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற அமர்வு அறிவுரை வழங்கியுள்ளது.
அரசு நிலங்களை அபகரித்ததாகவும், தனியாருக்கு விற்றதாகவும் ஜாா்க்கண்ட் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் மீது சுமாா் ரூ.600 கோடி நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உள்பட 14 போ் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதில், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய ஏழு சம்மன்களுக்கு ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.
கடந்த ஜன. 20-ஆம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. ஜன. 27-ஆம் தேதி தில்லி சென்ற சோரனிடம் விசாரணை நடத்த அவரின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமாா் 13 மணி நேரம் காத்திருந்தனா்.
அங்கு சோரன் இல்லாததால் ரூ.36 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ காா், சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணையில் இருந்து தப்பிக்க தில்லியில் இருந்து ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சிக்கு 1,250 கி.மீ. தொலைவு சாலையில் பயணித்து சோரன் வந்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், முதல்வா் ஹேமந்த் சோரனிடம் இரண்டாவது முறையாக ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா். 7 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் வந்த பாதுகாப்புப் படை வீரா்களின் உடலில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. சோரன் இல்லத்தைச் சுற்றி கண்காணிக்க அந்த கேமராக்களை பயன்படுத்தினா். புதன்கிழமை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அவரது இல்லத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சோரனிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் ஜேஎம்எம் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.இந்நிலையில், ஹேமந்த் சோரனின் இல்லத்தில் கூடிய ஜேஎம்எம் கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சம்பயி சோரனை ஜேஎம்எம் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தோ்வு செய்தனா்.
அதைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகைக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் பேருந்தில் சென்றனா். அங்கு அமலாக்கத் துறையினரின் பாதுகாப்பில் வந்த ஹேமந்த் சோரன் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அளித்தாா். அவரது ராஜிநாமாவை ஆளுநா் ஏற்றுக் கொண்டாா். இதையடுத்து, ஹேமந்த் சோரனை அங்கிருந்தபடியே அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஹேமந்த் சோரனின் ராஜிநாமாவை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டதையடுத்து, 47 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க போக்குவரத்துத் துறை அமைச்சா் சம்பயி சோரன் உரிமை கோரினாா்.