» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை: டெல்லி அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!

சனி 20, ஜனவரி 2024 4:55:50 PM (IST)

அயோத்தியில் ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் சிலை பிரதிஷ்டை நாளில், டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் ஆன்மிக உணர்வு மற்றும் அவர்களின் கோரிக்கைகள் காரணமாக, ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு ஜனவரி 22-ம் தேதி மதியம் 2.30 மணி வரை அரை நாள் விடுமுறை விடப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 

குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது தில்லிக்கும் அறிவித்துள்ளது. 

முன்னதாக, ஜனவரி 22ஆம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் அரை நாள் விடுமுறை என மத்திய அரசு ஜன.18ல் அறிவித்திருந்தது.  ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory