» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடிகர் யஷ்க்கு கட்அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி : கர்நாடகத்தில் சோகம்!

திங்கள் 8, ஜனவரி 2024 12:51:18 PM (IST)

கர்நாடகத்தில் நடிகர் யஷ்க்கு கட்அவும் வைத்தபோது மின்சாரம் தாக்கி அவரது ரசிகர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் யஷ். இவர் இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது பிறந்தாளை முன்னிட்டு ரசிகர்கள், 25 அடி உயர கட்அவுட்டை கடக் மாவட்டத்தில் நேற்றிரவு வைத்தனர். 

அப்போது மின்சாரம் தாக்கியதில் ஹனுமந்த, முரளி நடவினமணி, நவீன் ஆகியோர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.  உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் யஷ் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory