» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொழிலதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: கடத்தல் நாடகமாடிய அழகு நிலைய பெண் கைது!
வியாழன் 6, அக்டோபர் 2022 5:17:03 PM (IST)
திருப்பூர் அருகே பைனான்ஸ் அதிபரிடம் ரூ.2கோடி மோசடி செய்துவிட்டு, கடத்தல் நாடகமாடிய அழகு நிலைய பெண் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பிரவீனா காணாமல் போனதாக கூறப்படுகிறது. காணாமல் போன பிரவீனாவை கண்டுபிடித்து தர வேண்டும் என அவரின் தாய் பிலோமினா மற்றும் இரண்டாவது கணவர் சந்திரகுமார் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பிரவீனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அதில் சிவகுமார் உடன் சேர்ந்து பிஸ்னஸ் செய்ததாகவும் தன்னை ஏமாற்றி தனது நிலத்தின் பேரில் வங்கி கடன் பெற்றதாகவும் பணத்தை திரும்ப தருவதாக கூறி திருச்சிக்கு அழைத்து சென்று வீட்டில் அடைத்து மேலும் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்று தன்னை சித்ரவதை செய்வதாக கூறி இருந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்த போது ஈரோட்டில் பதுங்கி இருந்த சிவகுமார் மற்றும் பிரவீனாவை கண்டுபிடித்து பல்லடம் அழைத்து வந்தனர்.
விசாரணையின் போது பிரவீனா பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்க அவரின் தாய் பிலோமினா மற்றும் அவரது இரண்டாவது கணவர் இருவரும் மிரட்டி வந்ததாகவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோவை பிரவீனாவின் தாய் மற்றும் அவரது இரண்டவது கணவர் இருவரும் சேர்ந்து வெளியிட்டு நாடகமாடி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் குறிப்பிட சொத்துக்களை மோசடி செய்து பெற்றுக் கொண்டு வங்கி கடன் பெற்று தன்னை ஏமாற்றியதாக கோவையை சேர்ந்த குமரேசன் என்பவர் கொடுத்த புகாரால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
அதன் படி கோவை சாய்பாபா காலனி சேர்ந்த குமரேசன் என்பவரிடம் சிவக்குமார் மற்றும் பிரவீனா இருவரும் கணவன் மனைவி என அறிமுகமானதாகவும் தனக்கு கடன் பிரச்சனையால் பணம் தேவைப்பட்டதால் வங்கியில் கடன் பெற்று தருமாறு தனக்கு சொந்தமான இடத்தை பிரவீனா பெயரில் மாற்றிக் கொடுத்ததாகவும் ஆனால் 2 கோடி கடன் பெற்று பணத்தை தராமல் அலைகழித்து வந்ததாகவும் தற்போது வீடியோ வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்து புகார் அளித்துள்ளார். நில மோசடி புகாரின் பேரில் பிரவீனா மற்றும் சிவகுமாரை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி : நெல்லை சரக டிஐஜி முதலிடம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:10:00 PM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் தாமதம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சி உதயம்: கொடி அறிமுகம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:17:34 AM (IST)
