» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியின் மேயராகப் பதவியேற்றுக்கொண்ட மேரி பிரின்சி லதா, இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தனது பணிகளை முறைப்படி தொடங்கினார்.
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த மேயருக்கு, மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மலர்க்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், மேயருக்கான இருக்கையில் அமர்ந்து தனது முதல் நாள் கோப்புகளில் அவர் கையொப்பமிட்டார்.
பணிகளைத் தொடங்கிய கையோடு, மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், சாலை வசதிகள் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் அவர் முதற்கட்ட ஆலோசனை நடத்தினார். நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)

தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)


