» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)
நெல்லை ரயில் பணிமனையில் நடைபெறவுள்ள அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவைகளின் நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
புதிய நேர விபரங்கள்:
எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் (வண்டி எண்: 20627): சென்னை எழும்பூரில் இருந்து வருகிற ஜூன் 30ஆம் தேதி காலை 5:00 மணிக்கு வழக்கம் போல் புறப்படுவதற்குப் பதிலாக, 45 நிமிடங்கள் தாமதமாகக் காலை 5:45 மணிக்குக் புறப்பட்டு நாகர்கோவில் செல்லும்.
நாகர்கோவில் - எழும்பூர் வந்தே பாரத் (வண்டி எண்: 20628): நாகர்கோவிலில் இருந்து வருகிற ஜூன் 30ஆம் தேதி மதியம் 2:20 மணிக்கு வழக்கம் போல் புறப்படுவதற்குப் பதிலாக, 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக மாலை 3:30 மணிக்குக் புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடையும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)

பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)


