» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)
கேரளாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகும் வாலிபர்களைத் திருமணம் செய்வதாகக் கூறி, ரூ. 50 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணைப் பெரும்பாவூர் போலீசார் கைது செய்துள்ளனர்!
கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள எடத்தலா பகுதியைச் சேர்ந்தவர் ஷம்லா (29). இவருக்குப் பெரும்பாவூர் அருகே உள்ள மஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில், அந்த வாலிபரைத் திருமணம் செய்து கொள்வதாகவும், தனது வர்த்தகத்தில் பங்குதாரராகச் சேர்ப்பதாகவும் ஷம்லா ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அந்த வாலிபர், கடந்த 3.9.2024 முதல் 20.11.2024 வரை பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ. 50 லட்சத்தை வங்கி கணக்கு மற்றும் ஜிபே மூலம் ஷம்லாவிடம் செலுத்தியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட ஷம்லா, வாலிபரைத் திருமணம் செய்யாமலும், வர்த்தகத்தில் சேர்க்காமலும் ஏமாற்றியுள்ளார். வாலிபர் தனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது தராமல் காலம் கடத்தியுள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த வாலிபர் பெரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, ஷம்லாவைக் கைது செய்தனர்.
பல இடங்களில் மோசடி:
போலீசாரின் விசாரணையில், ஷம்லா இதே பாணியில் மலப்புரம், வயநாடு, கோதமங்கலம், ஆலுவா உள்ளிட்ட பல இடங்களில் பல்வேறு வாலிபர்களிடம் நைசாகப் பேசி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. குறிப்பாகக் கோதமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 20 லட்சமும், ஆலுவாவைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 11 லட்சமும் ஏமாற்றி, அந்த பணத்தில் அவர் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)

பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)



இவாJun 29, 2026 - 12:23:32 PM | Posted IP 172.7*****