» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

செப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:11:44 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 18ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 18.09.2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து ஆகஸ்ட் 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நேரில் பெறப்படும். 
 
கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் வசதி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory