» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குழந்தைகளும், முதியவர்களும் ரேபிஸ் நோய்க்கு இரையாகி வருகின்றனர்: உச்சநீதிமன்றம் கவலை
திங்கள் 28, ஜூலை 2025 5:17:23 PM (IST)
நாய் கடியால் குழந்தைகளும், முதியவர்களும் ரேபிஸ் நோய்க்கு இரையாகி வருகின்றனர் என உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
நாய் கடியால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்பாக ஊடங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது. இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா, நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஒவ்வொரு நாளும், டெல்லியிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன, இது ரேபிஸ் நோய் பாதிப்புக்கு வழிவகுக்கிறது. குழந்தைகளும், முதியவர்களும் இந்த கொடூரமான நோய்க்கு இரையாகி வருகின்றனர்.
இந்த விவகாரம் மிகவும் அச்சுறுத்தக்கூடியது; ஆபத்தானது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு முன்பு, இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் பொருளாதாரத்தை கொன்றது பிரதமர் மோடிதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 31, ஜூலை 2025 5:48:41 PM (IST)

டிரம்ப் அறிவிப்பு எதிரொலி: இந்தியாவின் நடவடிக்கை என்ன? - பியூஷ் கோயல் விளக்கம்!
வியாழன் 31, ஜூலை 2025 5:27:52 PM (IST)

மாலேகான் குண்டு வெடிப்பு: பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!
வியாழன் 31, ஜூலை 2025 12:01:57 PM (IST)

நிசார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்!
புதன் 30, ஜூலை 2025 8:32:25 PM (IST)

போரை நிறுத்துமாறு எந்த நாட்டு தலைவரும் கூறவில்லை : மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்
புதன் 30, ஜூலை 2025 8:40:20 AM (IST)

பஹல்காம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்க் கட்சியினர் கவலை அடைந்தனர் : அமித்ஷா
செவ்வாய் 29, ஜூலை 2025 4:50:08 PM (IST)
