» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த 4 பேர் சாவு : மேலும் 3 பேர் கவலைக்கிடம்!

வியாழன் 21, மார்ச் 2024 8:16:23 AM (IST)

பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ளது குஜ்ரான் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் சிலர் நேற்றுமுன்தினம் இரவு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்தனர். பின்னர் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் விஷ சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷ சாராயம் குடித்த மேலும் 3 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, மன்பிரீத் சிங் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மன்பிரீத் சிங் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory