» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி!

திங்கள் 29, ஏப்ரல் 2024 5:41:37 PM (IST)

பிரதமர் மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 15-ந்தேதி பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கறிஞர் ஜோன்டேல் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார் அந்த மனுவில், "பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரசாரத்தின் போது மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். வெறுப்பு பேச்சு காரணமாக பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இதுபோன்ற கோரிக்கை மனுக்களை தேர்தல் ஆணையம் நாள்தோறும் விசாரித்து வருகிறது. மனுதாரரின் புகார் மனு தேர்தல் ஆணையத்தில் பரிசீலனையில் உள்ளது. சட்டப்படி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்." என தெரிவித்தார். இதனை பதிவுசெய்துகொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory