» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமி படுகொலை: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் - கனிமொழி எம்.பி. உறுதி!
வெள்ளி 13, மார்ச் 2026 12:40:01 PM (IST)

வேடநத்தம் சிறுமி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று கனிமொழி எம்.பி. உறுதியளித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி. கூறியதாவது: இளம் பெண்ணின் உயிர் பறிக்கப்பட்டது மிகக் கொடுமையான ஒரு சம்பவம். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது; அதன் முழு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ஒரு ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பிக்கள், 6 ஆய்வாளர்கள் மற்றும் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் நிச்சயமாக விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
உணவகங்கள் மற்றும் விடுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால், மாணவர்கள் விடுதிகளில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படும் சூழல் நிலவுகிறது. வீடுகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறினாலும், இணையதளம் மூலம் பதிவு செய்யும்போது சிலிண்டர் கிடைப்பதில்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய போர்ச் சூழலில் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. இந்தக் குழப்பங்களுக்கு மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றார். மேலும், "திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு, "தேர்தல் அறிவிப்பே இன்னும் வெளியாகவில்லை. முறைப்படி அறிவிப்பு வந்த பிறகு தேர்தல் அறிக்கை குறித்துத் தெரிவிக்கப்படும்," என்று பதிலளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!
வெள்ளி 13, மார்ச் 2026 12:13:57 PM (IST)

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!
வெள்ளி 13, மார்ச் 2026 12:10:01 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 668-வது நாளாக பொட்டலூரணி மக்கள் போராட்டம்!
வெள்ளி 13, மார்ச் 2026 10:28:37 AM (IST)

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
வெள்ளி 13, மார்ச் 2026 8:40:03 AM (IST)

இளம்பெண் தலை துண்டித்து கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:32:53 AM (IST)

