» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இளம்பெண் தலை துண்டித்து கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:32:53 AM (IST)
அம்பை அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவியின் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பை பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பட்டன் (32). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு, சுதா (26) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். முத்துப்பட்டன் தனது மனைவி சுதாவின் நடத்தையில் அடிக்கடி சந்தேகப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று மதியம் வீட்டில் குழந்தைகள் இல்லாத நேரத்தில், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற முத்துப்பட்டன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்துச் சுதாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடங்காத அவர், சுதாவின் தலையைத் தனியாகத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த சுதா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அம்பை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுதாவின் உடல் மற்றும் துண்டிக்கப்பட்ட தலையை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட முத்துப்பட்டனைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடும்பத் தகராறில் இளம்பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பை பகுதியில் மிகுந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 668-வது நாளாக பொட்டலூரணி மக்கள் போராட்டம்!
வெள்ளி 13, மார்ச் 2026 10:28:37 AM (IST)

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
வெள்ளி 13, மார்ச் 2026 8:40:03 AM (IST)

திருச்செந்தூர் கோவிலுக்கு மீண்டும் சுற்றுப்பேருந்து இயக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி!
வெள்ளி 13, மார்ச் 2026 8:08:09 AM (IST)

நெல்லையில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: போக்சோ குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 8:30:53 PM (IST)

திமுகவின் மிரட்டலால் ரஜினி பின்வாங்கினார்; ஆனால் விஜய் அஞ்சமாட்டார்! - ஆதவ் அர்ஜுனா
வியாழன் 12, மார்ச் 2026 5:45:26 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் மெய்நிகர் மாதிரி செயலி அறிமுகம்: இந்தியாவில் முதல் முறை..!
வியாழன் 12, மார்ச் 2026 4:48:45 PM (IST)

