» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களின் நேரம் ஜன.1 முதல் மாற்றம்!

திங்கள் 29, டிசம்பர் 2025 11:20:08 AM (IST)

சென்னை எழும்பூரில் இருந்து ரயில்கள் புறப்படும் நேரம் வருகிற 1-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, நெல்லை, பொதிகை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் வருகிற 1-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் மாற்றம்

1. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 1-ம் தேதி முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு பதிலாக 10.40 மணிக்கு புறப்படும்.

2. எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்கு புறப்படும்.

3. எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் 8 மணிக்கு புறப்படும்.

4. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், ஜனவரி 1-ம் தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்கு புறப்படும்.

5. எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 8.35 மணிக்கு புறப்படும்.

6. எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும்.

7. எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்கு புறப்படும்.

8. எழும்பூரில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்கு புறப்படும்.

9. எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் நேரம் மாற்றப்படவில்லை.

மறுமார்க்கமாக....

1. நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 8.50-க்கு புறப்படும்.

2. சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.

3. செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கும் புறப்படும்.

4. ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணிக்கு புறப்படும்.

5. தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 9.05 மணிக்கு புறப்படும்.

6. இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரயில்களில் மறுமார்க்கமாக புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை.

மின்சார ரயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory