» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செல்போனில் பேசுவதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

திங்கள் 5, டிசம்பர் 2022 10:43:35 AM (IST)

சிவகிரி அருகே செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன் புத்தூர் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகள் முருக ஜோதி (20). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது செமஸ்டர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். முருக ஜோதி அடிக்கடி போனில் பேசும் பழக்கம் கொண்டு இருந்து வந்துள்ளார். இதனை அவரின் தாயார் சண்முகத்தாய் கண்டு கண்டித்துள்ளார். 

இதனால் கோபம் அடைந்த முருக ஜோதி வீட்டில் அருகே உள்ள மேலூர் துரைச்சாமிபுரம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட  கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கிணறு உள்ள துரைசாமிபுரம் சிவகிரி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்டது. இதனால் இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் (பொறுப்பு ) ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து முருக ஜோதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory